search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman employee died"

    காரிமங்கலம் அருகே லாரி மோதிய விபத்தில் தனியார் நார் தொழிற்சாலை பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த முக்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் மனைவி சின்னம்மாள் (வயது 50). இவர் காரிமங்கலம் அருகே கும்மாரஅள்ளி பகுதியில் உள்ள தனியார் நார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்தார். நேற்று இரவு தொழிற்சாலையில் வேலை பார்த்தபோது பின்னால் வந்த லாரி இவர் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த இவரை சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். வழியிலேயே இறந்துவிட்டார்.

    இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×