என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman demonstration"
கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டது வனத்தாம்பாளையம் காலனி. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. மேலும் மாசுப்பட்டு கலங்கலாக குடிநீர் வந்தது.
இதை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் கோபி, தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து போராட்ட காரர்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டமங்கலம் ஒன்றிய பொருளாளர் அம்பேத்கர் மற்றும் வனத்தாம்பாளையம் காலனி பகுதி முக்கிய பிரமுகர்கள் தெய்வநாயகம், சுரேஷ், ஜானகிராமன், கிருஷ்ண மூர்த்தி, தவமூர்த்தி ஆகியோர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனை சந்தித்து மனு கொடுத்தனர்.
அவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் கூறினார். தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்