search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking shortage"

    கண்டமங்கலம் அருகே குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசுப்பட்டு கலங்கலாக குடிநீர் வந்ததால் நடவடிக்கை எடுக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டது வனத்தாம்பாளையம் காலனி. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வந்தது. மேலும் மாசுப்பட்டு கலங்கலாக குடிநீர் வந்தது.

    இதை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் மற்றும் ஆண்கள் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் கோபி, தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    தொடர்ந்து போராட்ட காரர்கள் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டமங்கலம் ஒன்றிய பொருளாளர் அம்பேத்கர் மற்றும் வனத்தாம்பாளையம் காலனி பகுதி முக்கிய பிரமுகர்கள் தெய்வநாயகம், சுரேஷ், ஜானகிராமன், கிருஷ்ண மூர்த்தி, தவமூர்த்தி ஆகியோர் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அவர்களிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் கூறினார். தொடர்ந்து போராட்டத்தை கை விட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ×