search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wokers Meeting"

    • வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊழியர் கூட்டம் ஆசிரியர் காலணியில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியம் சிவகிரி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஊழியர் கூட்டம் ஆசிரியர் காலணியில் நடைபெற்றது. நகர தலைவர் ஒருசொல்வாசகன் தலைமை தாங்கினார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் ஆனந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இக்கூட்டத்தில் வருகிற 13 -ந்தேதியன்று தென்காசியில் நடைபெற இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு சிவகிரி பா.ஜ.க. சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கவும், கூட்டத்தில் திரளாக கலந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். தொடர்ந்து தென்காசி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு சான்றிதழ் பெற்ற ராஜ் நியூ நர்சரி பிரைமரி பள்ளிக்கு ஆனந்தன் நேரில் சென்று முதல்வர் ராமருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், ஓ.பி.சி. அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெயகோதண்டராமன், ஓ.பி.சி. அணி மாவட்ட துணைத் தலைவர் தங்கம், மகளிர் அணி மாவட்ட துணைத்தலைவர் தேவி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் ராமசாமி, ஓபிசி அணி மாவட்ட ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பொன்சேகர், வாசு வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சேட்குமார், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சக்திவேல், புலியூரான், பிரச்சார பிரிவு ஒன்றிய செயலாளர் பரமசிவம், சிவகிரி நகர கிளை தலைவர்கள், கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×