என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wife dowry torture"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே கோவிந்தநகரம் வைகை நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில காலம் நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படடது. மேலும் ராஜேஸ்வரியின் நகையை வாங்கி பிரபு அடகு வைத்துள்ளார். இதனை திருப்பி தருமாறு கேட்டபோது காலம் தாழ்த்தியே வந்துள்ளார்.
தற்போது மேலும் 10 பவுன் தங்க நகை வாங்கி வந்தால் மட்டுமே தனது மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என பிரபுவின் தாயார் மயிலம்மாள் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்