search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife dowry torture"

    ஆண்டிப்பட்டி அருகே காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே கோவிந்தநகரம் வைகை நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் ராஜேஸ்வரி என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில காலம் நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படடது. மேலும் ராஜேஸ்வரியின் நகையை வாங்கி பிரபு அடகு வைத்துள்ளார். இதனை திருப்பி தருமாறு கேட்டபோது காலம் தாழ்த்தியே வந்துள்ளார்.

    தற்போது மேலும் 10 பவுன் தங்க நகை வாங்கி வந்தால் மட்டுமே தனது மகனுடன் குடும்பம் நடத்த முடியும் என பிரபுவின் தாயார் மயிலம்மாள் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி இது குறித்து தேனி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×