search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife burned"

    சுவாமிமலை அருகே குடிபோதையில் மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே உள்ள தீ மாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39). டிரைவர். இவரது மனைவி நிர்மலா (28) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார்.

    அப்போது ஆத்திரமடைந்த முருகானந்தம் மண்எண்ணையை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசிய்யா, ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×