search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wielding"

    • கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

     மதுரை

    மதுரை மேலகைலாசநாதபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற சில்க் முருகன் (வயது 41). கட்டிட மேஸ்திரி. இவரிடம் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த சொக்கன் என்ற முருகன் (50) கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சில்க் முருகன் நேற்று தத்தநேரி குளியல் தொட்டி அருகே நின்று கொண்டு இருந்தார்.

    அங்கு வந்த வாலிபர் ஒருவர் 'மதுபானம் வாங்கித்தா' என்று தொந்தரவு செய்தார். சொக்கன் அவரிடம், 'ஏன் இப்படி சங்கடப்படுத்துகிறீர்கள்?' என்று தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த வாலிபர் சொக்கனை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். சொக்கனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சில்க் முருகன் செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம், மேல வாகைகுளம், கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுராஜா மகன் கேடா என்ற அறிவழகன் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×