என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » water inflow increased
நீங்கள் தேடியது "Water inflow increased"
ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
மீண்டும் காவிரிநீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 184 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 11 ஆயிரத்து 583 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 9 மணிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதமும், மாலை 5 மணிக்கு பிறகு 22 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்தது. வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
கோத்திக்கல்- மணல் திட்டு இடையே பரிசல் இயக்கப்படுகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள். மெயின் அருவியில் இன்று 55-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது. #Hogenakkal #Cauvery
கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. இதனால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியிலும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
அதன்பின்பு மழை குறைந்ததால் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியது. எனவே தற்போது அணையின் நீர்மட்டம் 138.47 அடியாக உள்ளது. நேற்று வரை 947 கன அடி நீர் வந்துகொண்டிருந்தது.
இன்று காலை அது 1450 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2206 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணைக்கு நீர்வரத்து 1777 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 69.29 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.75 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.76 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 10.4, தேக்கடி 11.4, கூடலூர் 1.7, உத்தமபாளையம் 0.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மேட்டூர்:
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் குடகு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பின.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.
விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மெயின் அருவி, சினிபால்சில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். பரிசல்கள் நேற்றும் தொடர்ந்து இயக்கப்பட்டன.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடி வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 25 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 16 கண் பாலம் வழியாக 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உபரிநீர் வெளியேறுவதை பார்த்து ரசித்தனர்.
கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் குடகு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகள் நிரம்பின.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதேபோல கபினி அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக வந்தது. நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது.
விடுமுறை தினமான நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். மெயின் அருவி, சினிபால்சில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். பரிசல்கள் நேற்றும் தொடர்ந்து இயக்கப்பட்டன.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரத்து 742 கனஅடி வந்து கொண்டு இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 25 ஆயிரத்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 16 கண் பாலம் வழியாக 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உபரிநீர் வெளியேறுவதை பார்த்து ரசித்தனர்.
ஒகேனக்கலுக்கு இன்று காலை 6 மணி நிலவரப்படி வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. #Hogenakkal #Cauvery
ஒகேனக்கல்:
கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் 2-வது முறையாக நிரம்பின. இதனால் நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.
இந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் நீர் திறப்பு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கனஅடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 62 ஆயிரத்து 319 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று பகல் 12 மணிக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஐந்தருவியில் உள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலும் தண்ணீர் செல்கிறது.
தொடர்ந்து இன்று 34-வது நாளாக பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல் வந்திருந்தனர். வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளதால் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியவில்லை.
மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள். ஒகேனக்கல்லில் உள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டு யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ். உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் 2-வது முறையாக நிரம்பின. இதனால் நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.
இந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை 6 மணி முதல் நீர் திறப்பு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கனஅடியாக உள்ளது. கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 62 ஆயிரத்து 319 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று பகல் 12 மணிக்கு நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.
நேற்று மாலை 6 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
ஐந்தருவியில் பாறைகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி
இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஐந்தருவியில் உள்ள பாறைகள் வெளியே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேலும் தண்ணீர் செல்கிறது.
தொடர்ந்து இன்று 34-வது நாளாக பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல் வந்திருந்தனர். வெள்ளப்பெருக்கு அதிகம் உள்ளதால் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியவில்லை.
மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்களது வாகனங்களை தடுத்து நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினார்கள். ஒகேனக்கல்லில் உள்ள விடுதிகளிலும் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் குவிக்கப்பட்டு யாரும் காவிரி ஆற்றில் இறங்கி குளிக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X