search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar SaparaBavani"

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று கணபதி ஹோமத்துடன் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி சப்பர பவனி நடந்தது. பூஜை வைபவங்களை அய்யப்ப பட்டர் செய்திருந்தார். விழாவில் தெரிசை அய்யப்பன், தொழில் அதிபர்கள் தவமணி, பெருமாள், நடராஜன், மண்டகப்படிதாரர் ஹரிகரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். விழாவை முன்னிட்டு இன்று மாலையில் நால்வர் சுவாமிகள் புறப்பாடு, திருமுறை விண்ணப்பம் ஆகியவையும், இரவில் காப்பு கட்டுதலும் நடக்கின்றது.

    ×