search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigilance police raid"

    அரசு மருத்துவமனைகளில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையின்போது, பணியாளர்களிடம் இருந்து லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #TNGovtHospitals #VigilanceRaid
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.

    திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

    ஊழியர்களின் வருகை பதிவேட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதேபோல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, திருவள்ளூர் அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை என தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையின்போது பல்வேறு பகுதிகளில் லஞ்சப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடலூர் அரசு மருத்தவமனையில் உள்ள பணியாளர்களிடம் 4000 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் பெண் பணியாளர் ஒருவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #TNGovtHospitals #VigilanceRaid
    தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #TNGovtHospitals #Bribe
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

    அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    இதனை கருத்தில் கொண்டே ஆஸ்பத்திரிகளில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் குறைந்த கட்டணத்தையே அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் குறிப்பிட்ட தொகையை கேட்டு வாங்குவதாக புகார் இருந்து வந்தது.

    இதேபோல மகப்பேறு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெறும் பெண்களை பார்க்க வரும் நோயாளிகளிடமும் லஞ்சம் கேட்பதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரு பெண்ணை பிரசவத்துக்காக அனுப்பிவிட்டு வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களிடம் பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிவிப்பதற்கு கூட லஞ்சம் கேட்கும் அவலம் அரசு ஆஸ்பத்திரிகளில் நீடித்து வருகிறது.

    இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பெரிய குறையாகவே உள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் புரையோடி கிடப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் ஆஸ்பத்திரிகளில் இடம் பெற்றுள்ளது. அதில் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யாரும் லஞ்சமாக பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ஆனால் இதையெல்லாம் ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதே இல்லை. இஷ்டத்துக்கு நோயாளிகளிடம் கை நீட்டும் பழக்கம் தொடர் கதையாகி வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது. காலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். நோயாளிகளிடமும், அவர்களை பார்க்க வந்த உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அரசு பொது மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.

    திருவல்லிக்கேணி கஸ்தூரிபா ஆஸ்பத்திரியிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

    எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சென்னை லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் 10 அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பாளர், நர்சுகள், டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருந்து குடோனிலும் ஆய்வு செய்தனர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஒருவாரமாக எக்ஸ்-ரே, மகப்பேறு பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம் ஆகியவற்றை கண்காணித்து வந்தனர். இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு வார்டுக்கும் சென்று விசாரித்தனர். மகப்பேறு பிரிவிலும் சோதனை நடந்தது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிற்பகலில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    பிரசவ வார்டு, நோயாளிகள் வருகை பதிவேடு, தலைக்காய பிரிவு உள்பட பல்வேறு வார்டுகளில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். அதில் உள்ள விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை ராஜாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    மகப்பேறு பிரிவில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர் ராஜன், ரூபா மற்றும் 12 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல வார்டிலும் சோதனை நடந்தது.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களிடமும் பணம் வசூல் செய்யப்படுகிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஸ்கேன், எக்ஸ்ரே சென்டர், மகப்பேறு அறை, ரத்த சோதனைப்பிரிவு, ஓ.பி.சீட்டு வழங்கும் அறைகளில் உள்ள மேஜைகளை திறந்து பார்த்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் நடந்த இந்த சோதனையால் அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. #TNGovtHospitals #Bribe
    தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து கரூர் டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கரூர்:

    தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் தீபாவளி பண்டிகை யையொட்டி மாமூல் வசூலில் ஈடுபடுவதாக வந்த புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கரூரில் உள்ள டாஸ்மாக் குடோனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    கரூர் சணபிரட்டி தொழிற்பேட்டை வளாகத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. இதனையொட்டியவாறே டாஸ்மாக் குடோன் செயல்படுகிறது. இங்கிருந்து தான் கரூர் மாவட்டத்தில் உள்ள 96 டாஸ்மாக் கடைகளுக்கும் விற்பனைக்காக, மதுபாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி குடோனில் இருப்பில் உள்ள மது வகைகளை விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று இரவு முதல் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 

    இந்த நிலையில் திடீரென அங்கு சென்ற, கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி உள்ளிட்ட போலீசார், டாஸ்மாக் குடோனுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தொழிற்பேட்டையின் முன்புற கதவினை போலீசார் இழுத்து பூட்டினர். சரக்கு வாகனங்களில் மதுபாட்டில்கள் ஏற்றும் பணியும் நிறுத்தப்பட்டது.

    தீபாவளி பண்டிகையையொட்டி மதுவகைகள் ஏதேனும் பதுக்கப்பட்டு ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் விற்கப்படுகிறதா?, கணக்கில் வராத பணம் ஏதும் புழக்கத்தில் இருக்கிறதா? என பல்வேறு கோணங்களில் துருவி துருவி போலீசார் விசாரித்தனர். இரவு நீண்ட நேரமாக நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் கணக்கில் வராத ரூ.67 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து குடோன் பணியாளர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். #ChengalpattuRegistrarOffice
    செங்கல்பட்டு:

    மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் செங்கல்பட்டில் இயங்கி வருகிறது.

    இங்கு நேற்று காலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. சங்கர் தலைமையில் அய்யப்ப பக்தர்கள் போல் மாறு வேடத்தில் அலுவலகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை 5 மணிக்கு பதிவுத்துறை அலுவலகத்திற்குள் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கதவை அடைத்தனர்.

    அங்கு இருந்த அனைவரையும் சோதனையிட்டனர். அலுவலகத்திற்கு உள்ளே இருந்த அனைவரையும் வெளியே விடவில்லை. மேஜை டிராயர்கள், கோப்புகள் உள்ள அறைகள் அனைத்தையும் இன்று அதிகாலை 3 மணிவரையில் விடிய விடிய சோதனை செய்தனர்.

    பத்திரபதிவாளர் செந்தூர் பாண்டியனின் காரை துருவி, துருவி சோதனையிட்டனர். அப்போது மேஜையிலும், கோப்புகள் அறையிலும் இருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பத்திர பதிவுக்கு வந்திருந்த பொதுமக்களை இரவு 10 மணி வரைக்கும் பத்திர பதிவு செய்ய அனுமதித்தனர். ஆன்லைனில் பத்திர பதிவுக்கு விண்ணப்பித்த இவர்களை வரிசை எண் பிரகாரம் பதிவாளர் செந்தூர் பாண்டியன் பதிவு செய்தார். பத்திர பதிவின் போது சொத்தை வாங்குபவர்களும் மற்றும் சாட்சியாளர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை கண்ட புரோக்கர்கள் தப்பி ஓடி தலைமறைவாகினர். எப்போதும் புரோக்கர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் பத்திர பதிவு அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வந்ததால் புரோக்கர்கள் யாரும் இல்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. #ChengalpattuRegistrarOffice
    கள்ளக்குறிச்சியில் வேளாண்மை துறை துணை இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    கச்சிராயப்பாளையம்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 53). இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் துணை இயக்குனராக (உரம்) பணியாற்றி வருகிறார்.

    இவர் பல்வேறு ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், லஞ்சம் வாங்குவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை மாவட்ட ஆய்வுக்குழுவினர் சேர்ந்து கடந்த 23-ந் தேதி சென்னை சேப்பாக்கம் வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    இதில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் கணக்கில் வராத பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் சங்கரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் 6 போலீசார் நேற்று 9 மணி நேரம் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் வீட்டுப்பத்திரம் உள்ளிட்ட 57 ஆவணங்கள் மற்றும் ஒரு லேப்-டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    நகைகள் அனைத்தும் தனது மகள் திருமணத்துக் காக வாங்கியது என்று கூறி, அதற்கான ஆவணங் களை போலீசாரிடம் வேளாண்மை துறை துணை இயக்குனர் சங்கர் காண்பித்தார். இதை யடுத்து அவற்றை மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சங்கரிடம் திரும்ப கொடுத்தனர்.

    இதையடுத்து சங்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 57 முக்கிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


    சங்கரின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் கச்சிராயப்பாளை யம் அருகே உள்ள நல்லாத்தூரில் உள்ள சங்கருக்கு சொந்தமான விதைப்பண்ணையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் 5 போலீசார் அதிரடி சோதனை நடத்தி னர். அங்கு எந்தவித ஆவணமும் கைப்பற்றப்பட வில்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. கச்சிராயப்பாளையம் அருகே நல்லாத் தூரில் சங்கரின் தம்பி ராஜேந்திரன் பெயரில் 10 ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் 4 ஏக்கர் நிலம் மற்றும் மாடி வீடு உள்ளது. ராவத்தநல்லூரில் 3 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. இவை அனைத்தும் சங்கர் தனது உறவினர்கள் பெயரில் வாங்கி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி செயலாளராகவும் சங்கர் பணியாற்றினார். அப்போது பல்வேறு திட்டப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.10 கோடி வரை மோசடி செய்து வீட்டுமனை உள்ளிட்டவைகளை சங்கர் வாங்கி இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அதிரடி சோதனையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #Vigilancepoliceraid

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி பகுதியில் 2 சோதனை சாவடிகள் உள்ளன.

    வன சோதனை சாவடியும் அருகேயே வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடியும் உள்ளது.

    இன்று காலை 6 மணியளவில் ஈரோட்டிலிருந்து 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழுவினர் ஒரு காரில் வந்தனர்.

    அவர்கள் பண்ணாரி வன சோதனை சாவடி அருகே உள்ள வட்டார போக்குவரத்து வாகன சோதனை சாவடிக்குள் புகுந்தனர். உள்ளே நுழைந்து கேட்டை அடைத்து கொண்டனர். உள்ளே இருந்த ஊழியர்களை வெளியே விடவில்லை. அவர்களிடம் அதிரடி விசாரணையில் இறங்கினர்.

    நாள் ஒன்றுக்கு இந்த வழியாக எத்தனை வாகனங்கள் செல்கிறது? சரக்கு லாரிகள் எத்தனை செல்கிறது? அவர்களிடம் எந்த முறையில் சோதனை மேற்கொள்கிறீர்கள்? என்று கிடுக்கி பிடி கேள்விகள் கேட்டனர்.

    மேலும் சோதனை சாவடியில் நடத்திய அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. கைப்பற்றப்பட்ட பணத்தை அங்கு உள்ள மேஜையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்து எண்ணினர். இதில் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது. “சோதனை நடத்தி கொண்டிருக்கிறோம். பிறகு சொல்கிறோம்” என்று கூறினர்.

    பண்ணாரி வாகன போக்குவரத்து சோதனை சாவடியில் இன்று காலையில் இருந்தே லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தி வரும் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×