search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vehicles penalty"

    திண்டுக்கல்லில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி மற்றும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அதிக பாரங்கள் ஏற்றி வந்த 3 லாரிகளை மடக்கி பிடித்து அவற்றுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் 7 ஆம்னி பஸ்களை மடக்கி சோதனையிடப்பட்டது. அந்த வாகனங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமல் இருந்தது. புகைச் சான்று இல்லாதது, முகப்பு விளக்குகளில் கண்ணை கூசச் செய்யும் வகையில் அதிக வெளிச்சம் தரும் விளக்குகளை பொருத்தி இருந்தது போன்ற குறைபாடுகளுக்காக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் அரசு அனுமதி இல்லாமல் ஒரு லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வரவே அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி லாரியை தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

    ×