என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varavara Rao arrested"
ஐதராபாத்:
பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதிய வன்முறை தொடர்பாகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்களான ஐதராபாத்தை சேர்ந்த எழுத்தாளர் வரவரராவ், கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, வெர்னான் கன்சல்லெஸ் ஆகிய 5 பேரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர்.
எழுத்தாளர் வரவரராவை கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி முதல் ஐதராபாத் அசோக்நகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யகோரி வரவரராவ் புனே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த புனே கோர்ட்டு அதை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து புனேயில் இருந்து போலீசார் ஐதராபாத்தில் உள்ள வரவரராவ் வீட்டுக்கு நேற்று இரவு சென்றனர். அங்கு வீட்டு காவலில் இருந்த வரவரராவை கைது செய்தனர்.
பின்னர் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு அவரை நள்ளிரவு ஐதராபாத்தில் இருந்து புனேவுக்கு அழைத்து சென்றனர்.
இன்று புனேவில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். #PMModi #VaravaraRaoArrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்