search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training teachers"

    நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பினை மாணவ-மாணவிகளுக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தாவரவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை தாவரவியல் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நுழைவுத்தேர்வான நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பினை நடத்தவுள்ளனர்.

    நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்பினை மாணவ-மாணவிகளுக்கு எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தாவரவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அளிக்கப்பட்டது. பயிற்சியை சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் கருத்தாளர்களாக காமராஜ், அறிவேந்தன், சுலோச்சனா, அர்ச்சுணன், சுரேஷ், கலியமூர்த்தி, செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தாவரவியல் ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சியினை அளித்தனர். இதில் அரசு பள்ளி தாவரவியல் பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    ×