search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Assembly #Edappadi Palaniswamy"

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    சென்னை:

    தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன.

    மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று சிலர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் தவறான வதந்தி பரப்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்பதை நாடே அறியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    ×