search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crimes against women"

    • தேசிய அளவில் தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது என மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினரார்.
    • கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டம் முடிந்ததும் மகளிர் ஆணையத் தலைவர் குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேசிய அளவில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது. அதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தற்போது குழந்தைத் திருமணம் மிகவும் குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் புகார் அதிகம் எழுந்தது.

    இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, பள்ளிகளில் பாலியல் சீண்டல் புகார் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வன்முறை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.
    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வந்த தாம்சன் ராயிட்டர்சின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கிளப்பிய அதிர்வலைகள் இன்னமும் அடங்கவில்லை. வேறு சில நிகழ்வுகளால், பரபரப்புகளால் கொஞ்சம் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், அந்த கருத்துக் கணிப்பு பற்றிய விவாதங்கள் எங்காவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    இந்த கருத்துக் கணிப்புக்கு இந்தியாவின் முதல் எதிர்வினை, மறுப்புதான். முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் பிரச்சினை என்று பல சாக்கு போக்குகளை இந்திய அரசும் அதன் பிரதிநிதிகளும் சொல்லி வந்ததை ஊடகங்களில் பார்த்தோம். இப்போதும் ஒவ்வொரு நிமிடமும் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்ணை வேறு எப்படியாவது அவமானப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    பெண் மீதான வன்முறையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. பெண் மீதான வன்முறை இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் மறுக்க முடியாத பிரச்சினை.

    ஆனால் எண்ணிக்கையை துறப்பதன் மூலம் தனக்கான பொறுப்பிலிருந்து இந்தியா தன்னை விடுவித்துக் கொள்கிறதோ? என்கிற சந்தேகத்தை இந்த கருத்துக் கணிப்பு குறித்த அதீதமான எதிர்வினைகள் ஏற்படுத்தியிருக்கிறன.

    இந்த கருத்துக் கணிப்பு வெளியான பிறகு நம் கவனத்திற்கு வந்த வன்முறை சம்பவங்களில், மூன்றே மூன்று சம்பவங்களை மட்டும் பார்ப்போம்.

    சமீபத்தில் ஜெய்ப்பூர் அருகில் 70 வயது பெண் ஒருவரை 21 வயது ஆண் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சிக்கும் போது, அந்த பெண் அதை தடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு காயம் பட்டு, சில நாட்களில் மருத்துவமனையில் இறந்துவிடுகிறார்.

    இது சென்னையில் நடந்தது. பத்து வயது சிறுமியை பாலியல் ரீதியில் சீண்டி துன்புறுத்தியதற்காக 99 வயது நபர் ஒருவர் சமீபத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



    இந்த துயரம் அடங்குவதற்குள், சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்த 11 வயது சிறுமியை லிப்ட் ஊழியர்கள், காவலாளிகள் என 15-க்கும் மேற்பட்டோர் 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு மேல் இன்னும் என்ன நடக்க வேண்டும்?

    இப்படி, ஒவ்வொரு நிமிடமும் நாம் கேள்விப்படும் எண்ணற்ற வன்முறைகளில் இது மூன்றையும் குறிப்பிட்டுச் சொன்னதற்கு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் வயதையும், முதல் இரண்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆண்களின் வயதும் தான் காரணம். அதாவது, எவ்வளவு வயதானாலும் பெண்ணுக்கு பாதுகாப்பும் இல்லை, ஆணுக்கு பொருட்டும் இல்லை.

    இந்த இரண்டு பெண்களில் யாரிடமும் சென்று இந்தியா பெண் மீதான வன்முறையில் முதலிடத்தில் இல்லை, கருத்துக் கணிப்பு முறையில் தவறு இருக்கிறது என்று வகுப்பெடுப்பது எவ்வளவு அபத்தமானதாக, பொறுப்பற்ற செயலாக இருக்கும்? இங்கு வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்தியா அந்த அநீதியைத்தான் இழைத்திருக்கிறது.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் பெண் மீதான வன்முறை என்பது அவள் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. பெண் கருக்கொலை இப்போதும் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பெண் பாகுபாட்டை சந்திக்க வேண்டியிருக்கிறது.

    கல்வி, தொடர்ந்து வேலைவாய்ப்பு, திருமணம், பதவி உயர்வு போன்ற பல விசயங்களிலும் தொடர்ந்து பாகுபாட்டை சந்திக்கும் பெண்கள் கூடுதலான உழைப்பை செலுத்திதான் ஒவ்வொரு தடையையும் உடைத்தெறிய வேண்டியிருக்கிறது.

    பாகுபாடு என்னும் வன்முறையை ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் மீதும் எந்தவொரு குற்ற உணர்வும் இன்றி இந்திய சமூகம் ஒவ்வொரு நொடியும் ஏவிக்கொண்டிருக்கிறது. இது தவிர, பாலியல் சீண்டல்களையும் வன்முறைகளையும் குடும்பத்திற்குள்ளும், வெளியிடங்களிலும், பொது இடங்களிலும் எதிர்கொள்ளாத பெண்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள் அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருப்பார்கள்.

    பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதி, பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் ஒரு இயல்பாக இருக்கிறது. சமூக ரீதியாகவே பாகுபாட்டை இந்தியா வளர்த்தெடுக்கிறது. பாகுபாடு, வன்முறைக்கு வழிவகுக்கிறது. நிர்பயா போன்ற மிக மோசமான வன்முறைகளுக்கு ஆளானோருக்கு கிடைக்கும் கவனமும் அழுத்தமும் ஒவ்வொரு நொடியும் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பிற இந்தியப் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்பதே இங்கு ஆகப்பெரிய அநீதி.

    நிர்பயாவுக்கு கிடைத்த நீதியை குறை சொல்வது இங்கு நோக்கமல்ல; அந்த நீதியின் வெளிச்சம் பிற இந்தியப் பெண்கள் மீதும் கொஞ்சம் படர வேண்டும் என்பதுதான் நோக்கம்.

    இதை எல்லாம் பற்றி நியாயமான கவலை கொள்ளும் ஒரு அரசு, முதலிடமா? மூன்றாம் இடமா? என்பதில் புழுங்காமல் தீர்வு நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் இயல்பாக மாறியிருக்கும் பாகுபாட்டை கலைக்கும் திட்டத்தை உருவாக்கி அதை எல்லா நிலைகளிலும் அமல்படுத்த வேண்டும். பெண் மீதான வன்முறை சட்டம் மூலமாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் தீர்வுகாண முயற்சிக்க வேண்டும்.

    அது வரை பெண் மீதான வன்முறை என்பது இந்திய சமூகத்தின் மீதான தீராத களங்கமாக சர்வதேச அரங்கில் தொடரும். அதை துடைத்தெறிவதற்கான வழி, எண்ணிக்கையில் இல்லை, செயல்பாட்டில் இருக்கிறது.

    ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்
    மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
    மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

    குறிப்பாக தன் கணவன்  மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது.

    பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.



    மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.

    நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும்.

    காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.

    நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    சென்னை:

    தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழக காவல்துறை பிற மாநில காவல்துறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதால் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகின்றன.

    மாநில எல்லைகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால் நக்சலைட் ஊடுருவல்கள் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவாமல் இருக்கவும் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று சிலர் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் தவறான வதந்தி பரப்புகின்றனர். ஆனால், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறும் என்பதை நாடே அறியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EdappadiPalaniswamy #CrimesAgainstWomen
    ×