search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Robbery"

    வெம்பாக்கம் அருகே சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த கூழமந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (45) சமையல் மாஸ்டர். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு சுவேதா, சதீஷ்குமார் என்ற மகனும்  மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். மகன், மகள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். காலை 11 மணி அளவில் அஞ்சலை பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 26 சவரன் நகையும் 1.25 லட்சம் ரொக்கப்பணமும் திருடு போனது தெரிந்தது. நகை-பணத்தை கொள்ளை அடித்த மர்மநபர்கள் வீட்டின் தோட்டத்து பக்கமாக சென்றிருப்பது தெரியவந்தது.

    கொள்ளை போன நகை-பணம் மதிப்பு ரூபாய் 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தூசி போலீசில் ரமேஷ் கொடுத்த புகார் மீது தூசி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    திருவண்ணாமலையில் அப்பள வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கணசேபுரத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). அப்பள வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை சேகர் எழுந்து பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 60 பவுன் நகை, பணம் மற்றும் வீட்டின் பத்திரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சேகர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×