search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruparangunram"

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும்.

    திருப்பரங்குன்றம் முருகப்பெருமாள் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை யிலும், மாலையிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முருகப்பெருமான் சத்யகிரீஸ்வரர் முன்னி லையில் சூரனை அழிக்க கோவர்த்தன அம்பிகையிடம் நவரத்தினங்கள் பதித்த வேலை பெற்றார்.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 6 மணி அளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெற உள்ளது. விழாவையொட்டி முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் மீது அமர்ந்து ரத வீதிகள் சுற்றி வந்து சொக்கநாதர் கோவில் முன்பு வீரபாகு தேவருடன் எழுந்தருளுவார்.

    அங்கு சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்கார லீலை நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடை பெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • திருப்பரங்குன்றம் முருகன்- தெய்வானையுடன் வீதி உலா நடந்தது.
    • இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திர நாளில் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையோடு எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.

    இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை விமர்சையாக கொண்டாடப்படும். இன்று ஆடி கார்த்திகையை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வா னைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி தெருவில் உள்ள ஆடி கார்த்திகை மண்டபத்தில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளினார். அங்கு இருக்கும் சுவாமி மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார்.

    தொடர்ந்து இரவு திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழ ரத வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    ×