search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thottiyam auto driver murder"

    தொட்டியம் அருகே ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொட்டியம்:

    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் காவிரி ஆற்றங்கரையில் கடந்த 4-ந் தேதி நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதீஷ்(வயது 24) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக அவருடைய நண்பர்களான கொசவம்பட்டியை சேர்ந்த வசந்த்(21), ராஜேஷ்குமார்(25), சிவசங்கரன்(25), லோகேஸ்வரன்(21), தொட்டியம் அரசலூரை சேர்ந்த விமல் (24) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்விரோதம் காரணமாக சதீசை எரித்து கொலை செய்ததாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×