search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruvannamalai students protest"

    திருவண்ணாமலையில் பேராசிரியர்கள் மீது மாணவி அளித்த பாலியல் புகார் பொய் என்று கூறி அக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் மாணவி பொய் புகார் அளித்திருப்பதாக கூறி அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர், நேற்று உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கல்லூரி முன்புள்ள கள்ளக்குறிச்சி- திருவண்ணாமலை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து விரைந்து வந்த வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, மாணவ-மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு திரும்பிச் சென்றனர். #Tamilnews
    ×