search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thiruthuraipoondi bulb"

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பியில் பல்பை எரிய விட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். #lightbulb #publicstruggle

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் சிவன்கோவில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த தெருவில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. பொதுமக்களின் கைகளுக்கு எட்டக்கூடிய அளவில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்கம்பியை சரிசெய்ய கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருத்துறைப்பூண்டி மின்வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தாழ்வாக செல்லும் கம்பியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த சிவன் கோவில் தெருமக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் நேற்று இரவு பல்புகளை தொங்கவிட்டு எரிய விட்டனர்.

    தெருக்களில் திடீரென பல்புகளை எரிய விட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எங்களது தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரிசெய்ய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் சரி செய்யவில்லை. அதன் காரணமாகவே பல்புகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினோம். தெரிவித்துள்ளோம். இதன்பிறகும் சரிசெய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #lightbulb #publicstruggle

    ×