என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruthuraipoondi bulb"
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் சிவன்கோவில் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த தெருவில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. பொதுமக்களின் கைகளுக்கு எட்டக்கூடிய அளவில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், மின்கம்பியை சரிசெய்ய கோரி ஊராட்சி நிர்வாகம் மற்றும் திருத்துறைப்பூண்டி மின்வாரியத்திடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தாழ்வாக செல்லும் கம்பியை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆவேசமடைந்த சிவன் கோவில் தெருமக்கள் தாழ்வாக செல்லும் மின் கம்பியில் நேற்று இரவு பல்புகளை தொங்கவிட்டு எரிய விட்டனர்.
தெருக்களில் திடீரென பல்புகளை எரிய விட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களது தெருவில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சரிசெய்ய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் சரி செய்யவில்லை. அதன் காரணமாகவே பல்புகளை தொங்கவிட்டு போராட்டம் நடத்தினோம். தெரிவித்துள்ளோம். இதன்பிறகும் சரிசெய்யவில்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #lightbulb #publicstruggle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்