என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » the chicken is kept in a cage to catch the leopard
நீங்கள் தேடியது "The chicken is kept in a cage to catch the leopard."
பாலக்கோடு அருகே சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழி வைக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவேரியப்பன் கொட்டாய் கிராமத்தில்கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து கோழிகளை பிடித்து சென்றது. சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரின் ஆட்டுப்பட்டியில் இரண்டு ஆட்டு குட்டிகளையும் கடித்து குதறி கொன்று தின்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி இருந்தது.
அப்பகுதியில் தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால் பொது மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைய பிடிக்க முடிவு செய்த வனத்துறையினர், காவேரி யப்பன் கொட்டாய் வனப்பகுதியில் புலி வரும் வழித்தடத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டில் கோழியுடன் வைத்துள்ளனர்.
இதனால் விரைவில் சிறுத்தை சிக்கும் என எதிர்பா ர்த்து காத்திருக்கின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X