search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telecom warns"

    • தொலைத் தொடர்பு அதிகாரிகள் ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.
    • மோசடிச் செயலை கண்டால், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் புகாரளிக்கலாம்.

    செல்போன் டவர்கள் நிறுவுவது தொடர்பான மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கான மத்திய தொலைத்தொடர்புத் துறை, எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    செல்போன் டவர்களை நிறுவுதல் என்ற பெயரில் சில நேர்மையற்ற நிறுவனங்கள், தனிநபர்கள்,அதிகளவில் மாத வாடகை வழங்கப்படும் என்பது போன்ற போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பது தொலைத்தொடர்புத் துறையின் கவனத்திற்கு வந்துள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு வளாகத்தை குத்தகைக்கு, வாடகைக்கு விடுவதில் தொலைத் தொடர்புத்துறை மற்றும் டிராய், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவதில்லை. அதிகாரிகள் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு ஆட்சேபனை இல்லாச் சான்றிதழை வழங்குவதில்லை.

    செல்போன் டவர்களை நிறுவுவதற்கு ஏதேனும் நிறுவனம்,ஏஜென்சி, தனிநபர் பணம் கேட்டால், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்கவும், நிறுவனத்தின் நற்சான்றிதழ்களை சரிபார்க்கவும்.

    இதுபோன்ற மோசடிச் செயலை யாரேனும் கண்டால், அவர்கள் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து புகாரளிக்கலாம். மேலும் கூடுதலாக, தொலைத் தொடர்புத்துறையின் உள்ளூர் கள அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×