search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenagers arrested"

    • ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.
    • படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுத்தினர்

    ஜோலார்பேட்டை, ஜூலை.2-

    நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த 14 வயதுஉடைய சிறுமி அதே பகுதியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சிறுமியின் பாட்டி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் என்னுடைய பேத்தி கடந்த சில தினங்களாக பள்ளிக்கு வீட்டில் இருந்து செல்லும் போதும் திரும்பி வரும் போதும் அவ்வழியாக 2 வாலிபர்கள் அந்த மாணவியை காதலக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் ஆபாச வார்த்தைகளால் பேசி உள்ளனர்.

    இதனால் என் பேத்தி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

    எனவே சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினர். புகாரிப் பேரில் நட்டறம் பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து புதுப்பேட்டை சேர்ந்தவர்கள் சின்னராசு (வயது 22) மற்றும் கந்தவேல் (வயது 19) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வீடுகளில் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 27). இவருக்கும் புதுவையை சேர்ந்த காத்த வராயன் (29) என்பவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வேலைவாங்கி கொடுப்பது தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக இவர்கள் 2 பேரும் அடிக்கடி மோதி உள்ளனர். எனவே எந்த நேரத்திலும் அசம்பாவித சம்பவங்கள் நடை–பெறலாம் என ஆரோ–வில் போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி ஆரோவில் போலீசார் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று இன்று அதிகாலை அரிடி சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. இதனை கைப்பற்றிய ேபாலீசார் ஜெயச்சந்திரனை கைது செய்தனர். இதேபோல காத்தவராயன் வீட்டில் நடந்த சோதனையிலும் 4 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது.

    இதனைத்தொடர்ந்து காத்தவராயனை போலீசார் கைது செய்தனர். போலீசில் சிக்கிய 2 பேரும் எதற்காக வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தனர்? எங்கிருந்து வாங்கி வந்தனர் என்பது குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×