search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TamilNadu Mercantile Bank"

    • தூத்துக்குடியில் மற்ற எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையங்களை விரைவில் திறக்க, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இலக்கு வைத்துள்ளது.
    • எம்.எஸ்.எம்.இ மையம், 200 ஆரம்ப கிளைகளை வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் மற்றும் கடன் களை சிறந்த முறையில் வழங்குவதை உறுதி செய்யும்.

    தூத்துக்குடி:

    நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்ட முன்னணி நிதிச் சேவை அமைப்பாகும். இந்த வங்கி 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களு டன் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது. 50 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது.

    எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையம்

    தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது முதல் பிரத்யேக எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையத்தை சென்னையில் திறந்துள்ளதாக அறிவித்தது. இந்தச் செயலாக்க மையம், எம்.எஸ்.எம்.இ. வாடிக்கை நிறுவனங்களின் தேவைக ளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யும், கடன் செயலாக்க நேரத்தை வெகு வாக குறைக்கும் மற்றும் வங்கியின் எம்.எஸ்.எம்.இ. பிரிவில் வழங்கப்படும் கடன் அளவை அதிகரிக்க வும் உதவும்.

    நடப்பு நிதியாண்டின் (2023-24) முதல் காலாண்டில், தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடியில் மற்ற எம்.எஸ்.எம்.இ. செய லாக்க மையங்களை விரைவில் திறக்க, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி இலக்கு வைத்துள்ளது.

    அடுத்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இந்தியா முழுவதும் பிற நகரங்களில் எம்.எஸ்.எம்.இ. செயலாக்க மையங்களைத் தொடங்கவும் இந்த வங்கி இலக்கு வைத்துள்ளது. எம்.எஸ்.எம்.இ. மையத்துடன் இணைக்கப்பட்ட ரிலேஷன்ஷிப் மேனே ஜர்கள் வாடிக்கையாளர் களுக்கு ஏற்ற சரியான முன்மொழிவை வழங்கு வதில் இருந்தே கடன் வழங்கும் நடைமுறைகளின் இறுதிவரை உதவுவார்கள்.

    200 ஆரம்ப கிளைகள்

    இந்த சேவைகள் கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள இந்த வங்கியின் உள்ளடக்கியதாகும். இந்த எம்.எஸ்.எம்.இ மையம், 200 ஆரம்ப கிளைகளை வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் மற்றும் கடன் களை சிறந்த முறையில் வழங்குவதை உறுதி செய்யும்.

    முன்மொழிவுகள் மற்றும் கடன் முடிவுகளைப் பிரிக்க வும், கடன் மதிப்பீடு மற்றும் அனுமதியில் சிறந்த முன்னேற்றத்தை உறுதி செய்யவும், சீரான மதிப்பீட்டுத் தரத்தைப் பேணவும், உயர் மதிப்பீட்டுத் தரத்தைப் பராமரிக்கவும், கடன் அனுமதி அளிப்ப தற்கான நேரத்தைக் குறைக்கவும் மற்றும் வெளிப்படைத் தன்மையை கடைப் பிடிப்பதற்காகவும் இந்த மையம் திறக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பேசிய தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி எஸ். கிருஷ்ணன் கூறியதாவது, "எம்.எஸ்.எம்.இ நிறுவ னங்கள். இந்தியப் பொருளா தாரத்தின் வளர்ச்சி எந்திரம் எனலாம். எங்கள் கடன் திட்டங்கள் மற்றும் சேவை களை சிறந்த முறையில் வழங்க கவனம் செலுத்துவது மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவ னங்களுக்கு சிறந்த சேவை அளிக்க உறுதி பூண்டுள்ளோம்.

    அவர்களுக்கு ஆதரவு வழங்குவது எங்கள் கடமையாகும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் முக்கிய செயல்பாடுகள் இருக்கும் இடங்களில் எம்.எஸ்.எம்.இ செயலாக்க மையத்தை நிறுவுவதன் மூலம், கடன் தரத்துடன் கடன் விரிவாக்கத்தில் சிறப்பாக கவனம் செலுத்த நாங்கள் உறுதிய ளிக்கிறோம்." என்றார்.

    • தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
    • நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது, வங்கியின் பெருமை மிகு வாடிக்கையாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து உடமைதாரர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

    விழாவில் வங்கி தலைமை கணக்கு அதிகாரி, பொதுமேலாளர்கள், துணை மற்றும் இணை பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×