search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil makkal munnetra kalagam flag damage"

    திருவாரூர் அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழக கொடி கம்பத்தை சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள மருதம்பட்டினத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவர் மரணம் அடைந்ததையொட்டி நேற்று இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் கலந்து கொண்டார்.

    அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் கல்யாண சுந்தரம் தமிழக மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் என்பதால் அவரது கட்சி கொடி கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கல்யாண சுந்தரம் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார்.

    ×