search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
    • தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.

    ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

    மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனால் கிரீன் மேஜிக் பச்சைநிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

    மற்ற தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை உள்ள நிலையில் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ரூ.44-க்கு கிடைப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.

    சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் இன்னும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும் என்றார்.

    செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களின் 30 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
    மதுரை:

    மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் வினியோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் ஆவின் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களின் 30 பேருக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர் தலைமையிலான விசாரணை கமிட்டியிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விசாரணை மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெறுகிறது. விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் பட்சத்தில் பணி நியமன முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. எனவே புதிதாக ஆவினில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
    5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக பால் வினியோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையும் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கடந்த 2020-2021 ஆம் ஆண்டுகளில் ஆவின் மேலாளர் உள்ளிட்ட 61 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

    இந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவின் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பணியில் சேர்ந்த 61 ஊழியர்களும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. பால்வளத்துறை கூடுதல் செயலாளர் ஜவகர் தலைமையிலான விசாரணை கமிட்டியிடம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விசாரணை மதுரை ஆவின் நிறுவனத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின்போது பணி நியமனம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும் பட்சத்தில் பணி நியமன முறைகேட்டில் தொடர்புடைய ஊழியர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. எனவே புதிதாக ஆவினில் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    விசாரணையில் அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பணி நியமனம் தொடர்பாக கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு பதிலை பெற்று வருகிறார். இதனால் ஊழியர்கள் மத்தியில் பெரும் கிலி ஏற்பட்டு உள்ளது.
    ×