search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியானம்"

    ஆக்ஞா தியான பயிற்சியை தினமும் செய்து வந்தால் நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம்.
    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கை சின் முத்திரையில் வைக்கவும். பெருவிரலால் ஆள்காட்டிவிரல் நுனியை தொடவும். இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். ஐந்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்தப் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் நெற்றிப் புருவ மையத்தில் நிதானமாக தியானிக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    மேற்குறிப்பிட்ட பயிற்சியை தினமும் பயிலுங்கள். நிச்சயமாக நமது மூளையின் திறன் மேம்படும். நற்சிந்தனை பிறக்கும். நாம் நமது மூளை திறனால் அளவிடற்கரிய சாதனைகளை உலகில் நிகழ்த்தலாம். புது புது கண்டுபிடுப்புகளை சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கலாம். உங்கள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே கற்றுக்கொடுங்கள். வளர்ந்து வரும் பொழுது சிறந்த அறிஞர்களாக அவர்கள் நினைத்த துறையில் சாதனை புரிந்து வெற்றியாளர்களாக விஞ்ஞானிகளாக உருவாகுவது உறுதி.
    நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம்.
    நாம் சில நேரங்களில் உண்மையில் கோபமோ அல்லது விரக்தியோ அடைந்த நிமிடங்கள் இருக்கும், ஆனால் நமக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் : “அதிக அன்பானவராக இருங்கள்” ஏனெனில் இந்த மனநிலையோடு தேவையான தியான பயிற்சியும் சேர்ந்தால் நாம் பழக்கப்படுவோம், நம்மால் உடனுக்குடன் அதனை உருவாக்க முடியும்.

    யாருமே நிறைவானவர் அல்ல, நாம் அனைவருமே ஏதோ ஒரு தீய பழக்கத்தை கண்டறிந்து அதில் இருந்து வெளியேற நினைக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்த பழக்கங்கள் மாற்ற முடியாத கற்களில் செதுக்கியதாக இல்லாமல், மாற்றிக்கொள்ளும் வகையில் உள்ளன.

    இந்த மாற்றம் தேவை தான் ஆனால் அதற்கு நம்முடைய சொந்த முயற்சியும் முக்கியம். நம்மில் பலர் பல மணி நேரத்தை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறோம், ஆனால் நம்முடைய பெரிய சொத்தான நமது மனதிற்கான பயிற்சியை செய்ய மறந்து விடுகிறோம். தொடக்கத்தில் இது கடினம் தான், ஆனால் ஒரு முறை தியானம் நம் வாழ்வில் கொண்டு வந்திருக்கும் பலன்களைப் பார்த்துவிட்டால், நமது மனதிற்காக நேரத்தை முதலீடு செய்து செயலாற்றுவதில் நாம் மகிழ்ச்சியடைவோம்.

    மனதின் நன்மை பயக்கும் நிலைகளை மேம்படுத்தும் ஒரு வழிமுறையே தியானமாகும். மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
    ×