search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடைக்காலம்"

    • குமரி மேற்கு கடற்கரையில் தடைக்காலம் நிறைவடைகிறது
    • 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதிமுதல் ஜூன் 15-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் விதிக்கப்படடிருந்த தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. கடந்த 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்றுடன் தடை நீங்குவதால் அவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடலுக்கு செல்வதற்கு தங்களின் படகுகளை பழுதுநீக்கி, புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்கள் நள்ளிரவுக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளனர்.

    குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு களுக்கு உதவி பங்குத்தந்தை ஷாஜன் பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.

    குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் வடநாட்டு தொழிலாளர்கள் ஏராள மானோர் ஈடுபட்டு உள்ளனர். 60 நாட்கள் தடையையொட்டி, அவர்கள் தங்களின் ஊருக்கு சென்றிருந்தனர்.

    இன்று நள்ளிரவு முதல் தடை நீங்குவதால் தங்களின் சொந்த ஊருக்கு சென்றி ருந்த வடமாநில தொழி லாளர்கள் கடந்த 3 நாட்க ளாக குளச்சல் திரும்பிய வண்ணம் இருந்தனர்.

    • மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது
    • மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்;

    கன்னியாகுமரி :

    மீன்களின் இனப் பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கிழக்குக் கடற்கரைப் பகுதி யில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தொடங்கி நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்தது. இதைத்தொ டர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த சில நாட்களாக ஆயத்தமானார்கள்.

    இதற்கிடையில் 3 நாட்கள் கடலில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். 300 விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து "டோக்கன்" பெற்றுக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன.

    தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வலையில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கவாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இவர்கள் பிடித்து வரும் உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்டங்கள்மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் சின்ன முட்டம் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களைகட்ட தொடங்கிவிட்டது.

    ×