search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்தம்"

    • நெய்வேலியில் ரூ.4,400 கோடி மதிப்பில் பழுப்பு நிலக்கரியில் மெத்தனால் உற்பத்தி ஆலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
    • அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது.

    கடலூர்:

    பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திரவத்தை பழுப்பு நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதற்கான ஆய்வுப் பணிகளை, எள்எல்சி இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கானஆய்வு அறிக்கைக்கு அந்நிறு–வனத்தின் இயக்குனர் குழுவால் ஒப்புதல் வழங்கப்ப–ட்டுள்ளது.

    அதன் அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. நாட்டில் முதல் முறை சுரங்கம் மற்றும் மின்னுற்பத்தி பணிகள் மட்டுமின்றி. பல்வேறு துறைகளில் தனது வர்த்த–கத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற நோக்க–த்தில், என்.எல்.சி. இந்தியா அமைக்கப்படவிருக்கும் புதிய முயற்சியாகும். வரும் 2027-ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.

    மேலாளண்மைப் பணிகள்இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கான மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள, ETCHETEUA இந்தியா நிறுவனத்திற்கு ஆலோச னைகள் வழங்கும் பொருட்டு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமை–ச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தை. என்எல்சி. இந்தியா நிறுவனம் பணி யமர்த்தியுள்ளது.

    நிதிஆயோக்பரிந்துரை மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிதி ஆயோக் அமைப்பு. இத்திட்டத்தினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து திருப்தியடைந்து, மிக விரைவாக இதனை நிறைவேற்றப் பரிந்துரைத்து–ள்ளது குறிப்பிடத்தக்கது. ஊக்கத்தொகைஇத் திட்டத்தினை, உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களுக்கான பட்டியலில் இணைக்குமாறு, என்.எல்.சி. இந்தியா நிறு–வனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    அதன்படி இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் மெத்தனால் திரவத்திற்கு டன்னிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைமத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×