search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taapsee"

    தமிழில் ஆடுகளம் படம் மூலம் பிரபலமான டாப்சி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தின் மூலம் தமிழுக்கு எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். #Taapsee
    வெற்றி மாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனவர் டாப்சி. அதன்பின்னர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் தொடர்ந்து அவர் நடித்தபோதும் பெரிய அளவிலான இடத்தை தமிழில் அவரால் பிடிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்குப் படங்களிலும் நடித்துவந்த டாப்சி திடீரென இந்திக்குத் தாவினார்.

    அமிதாப்பின் ‘பிங்க்’கால் இந்தியில் அவருக்கு நன்றாகவே வரவேற்புகள் கிடைக்க கிட்டத்தட்ட பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். கைவசம் தற்போது நான்கு இந்திப்படங்களை வைத்துள்ள டாப்சி படங்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் முன்னணி இந்தி நடிகைகளுக்கே சவாலாக இருந்துவருகிறார்.



    இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி ஹிட்டான ஆர்.எக்ஸ்100 படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆதிக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.
    தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2 படங்களில் நடித்து தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் டாப்சி, ரசிகர் ஒருவர் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். #Taapsee
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்சி. அதன் பின்னர் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தாலும் தமிழில் பெரிதாக ஜொலிக்க வில்லை.

    தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு இந்தியில் கவனம் செலுத்திவந்த அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் தற்போது இந்தியில் பிசி நடிகையாக வலம் வருகிறார் டாப்சி.

    அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒருவர், “பாலிவுட்டில் மோசமான தோற்றம் கொண்ட நடிகை டாப்சிதான். அவரின் அடுத்த படங்களைப் பார்த்திட மாட்டேன் என நினைக்கிறேன். இன்னும் 2, 3 படங்களில் அவர் பாலிவுட்டில் இருந்து காணாமல் போய்விடுவார்” என்றார்.



    அதையொட்டி பதிவிட்ட டாப்சி, “ஏற்கனவே நான் முல்க், மன்மர்ஸியான், பத்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மேலும், சில படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளேன். எனவே இன்னும் சில காலம் என்னை சகித்துக்கொண்டுதான் படம் பார்த்தாக வேண்டும்” எனத் தன்னை கிண்டல் செய்த நபருக்கு பதில் அளித்துள்ளார்.
    ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Taapsee
    இந்தியில் டாப்சிக்கு கைநிறைய படங்கள் உள்ளன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாம் சபானா படத்தில் நடித்த பிறகே இந்தியில் அவரது மார்க்கெட் மளமளவென உயர்ந்தது.

    அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது முல்க், மேன் மர்ஷியான், தட்கா, பத்லா ஆகிய படங்களில் நடிக்கிறார். டாப்சிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் விளையாட்டு வீரர் மத்யாசுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின. 

    சமீபத்தில் மும்பை ஓட்டலில் இருந்து கைகோர்த்தபடி வெளியே வந்தபோது மத்யாசிடம் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இது சொந்த வி‌ஷயம். மேற்கொண்டு பேச விரும்பவில்லை’’ என்றார். 



    இந்த நிலையில் இருவருக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. டாப்சி குடும்பத்துடன் கோவா சென்று இருந்தார். மத்யாசும் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு டாப்சிக்கும் மத்யாசுக்கும் ரகசியமாக நிச்சயார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை டாப்சி உறுதிப்படுத்தவில்லை.
    ×