என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Suruli falls"
- தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.
கூடலூர்:
தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம். குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ துணிகளை துவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இன்று காலையும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தே காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.
நீர் வரத்து சீரான பின்னர் கும்பக்கரை மற்றும் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட த்தில் பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின் கம்பங்கள் அருேக செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பங்களில் கட்ட வேண்டாம் என மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.
இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் கொட்டி தீர்த்த கன மழையால் இடுக்கி, வயனாடு, எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன.
இந்த மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் எதிரொலித்தது. கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது மழை படிப்படியாக குறைந்து வந்தபோதிலும் சுருளி வனப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் 8-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு மழை முற்றிலும் நின்றுவிட்டதால் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. எனவே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்