search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbakarai"

    • தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    தொடர்மழை காரணமாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, வராக நதி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம். குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ துணிகளை துவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மலைப்பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை மற்றும் சுருளி அருவியில் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று சுருளி அருவிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இன்று காலையும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தே காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    நீர் வரத்து சீரான பின்னர் கும்பக்கரை மற்றும் சுருளி அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட த்தில் பெய்து வரும் கன மழையால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின் கம்பங்கள் அருேக செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பங்களில் கட்ட வேண்டாம் என மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர்.

    இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    ×