search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide by poisoning"

    • உடல் நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் மராட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கிட்னியில் கல் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திருப்பதி வயிற்று வலியால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

    இதனால் வீட்டில் மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×