search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sued"

    கொரடாச்சேரி அருகே தி.மு.க. அலுவலகத்தை சூறையாடிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியில் தி.மு.க கிளை கழக அலுவலகம் உள்ளது.

    இந்நிலையில் நேற்று அம்மையப்பனை சேரந்த அம்பிகாபதி மற்றும் பிரபு ஆகிய இருவரும் அலுவலகத்தில் நின்று பேசியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதை பார்த்த அம்மையப்பனை சேர்ந்த தி.மு.க நிர்வாகி கேசவன் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கேசவனை தாக்கியுள்ளனர். மேலும் அலுவலகத்தில் இருந்த போட்டோ, டி.வி. உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.
    ×