என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » students jail
நீங்கள் தேடியது "students jail"
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலிக்க மறுத்த மாணவியை கொல்ல முயற்சித்த வழக்கில் கைதான மாணவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அதே கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீர்பெருந்தகரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 25) என்பவர் பி.ஏ. வரலாறு இறுதியாண்டு படித்து வந்தார். இவர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் மாணவி அந்த காதலை ஏற்கவில்லை. இருப்பினும் சந்தோஷ்குமார் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே இறுதியாண்டு படிப்பை முடித்த மாணவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தங்கி அங்குள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று மதியம் கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் சிலர் சந்தோஷ்குமாரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அருண்பாண்டியன் என்ற மாணவரின் கையில் வெட்டு விழுந்தது. இதனால் உஷாரான மற்ற மாணவர்கள் சந்தோஷ்குமாரை மடக்கி பிடித்து ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
அதே கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீர்பெருந்தகரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 25) என்பவர் பி.ஏ. வரலாறு இறுதியாண்டு படித்து வந்தார். இவர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் மாணவி அந்த காதலை ஏற்கவில்லை. இருப்பினும் சந்தோஷ்குமார் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
இதற்கிடையே இறுதியாண்டு படிப்பை முடித்த மாணவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தங்கி அங்குள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று மதியம் கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் சிலர் சந்தோஷ்குமாரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது அருண்பாண்டியன் என்ற மாணவரின் கையில் வெட்டு விழுந்தது. இதனால் உஷாரான மற்ற மாணவர்கள் சந்தோஷ்குமாரை மடக்கி பிடித்து ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X