search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க மறுத்த மாணவியை கொல்ல முயற்சி- கைதான மாணவர் கடலூர் சிறையில் அடைப்பு
    X

    காதலிக்க மறுத்த மாணவியை கொல்ல முயற்சி- கைதான மாணவர் கடலூர் சிறையில் அடைப்பு

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதலிக்க மறுத்த மாணவியை கொல்ல முயற்சித்த வழக்கில் கைதான மாணவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    அதே கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நீர்பெருந்தகரம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 25) என்பவர் பி.ஏ. வரலாறு இறுதியாண்டு படித்து வந்தார். இவர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் மாணவி அந்த காதலை ஏற்கவில்லை. இருப்பினும் சந்தோஷ்குமார் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.

    இதற்கிடையே இறுதியாண்டு படிப்பை முடித்த மாணவர் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தங்கி அங்குள்ள ஒரு சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்து வந்தார். கடந்த சிலநாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மதியம் கோனேரிக்குப்பத்தில் உள்ள தனியார் கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவியை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் சிலர் சந்தோஷ்குமாரை தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அருண்பாண்டியன் என்ற மாணவரின் கையில் வெட்டு விழுந்தது. இதனால் உஷாரான மற்ற மாணவர்கள் சந்தோஷ்குமாரை மடக்கி பிடித்து ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×