search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student kidnapped"

    பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவன் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டு வெண்மணிநகர் மோட்டூரை சேர்ந்த ஒரு மாணவன், விருதம்பட்டு போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு நிதியுதவி பெறும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு முடித்து விட்டு இந்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு செல்கிறார்.

    கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டதால், அந்த மாணவன் பள்ளிக்கு சென்றான். மாணவனிடம், பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், பெற்றோரை அழைத்து வராத மாணவன், பள்ளி அருகே வரும்போது தன்னை காரில் வந்த கும்பல் கடத்தி சென்றதாக கூறினான்.

    பழைய பஸ் நிலையம் அருகே கொண்டுச் சென்று தன்னை விடுவித்து விட்டு கடத்தல் கும்பல் தப்பிச் சென்றுவிட்டதாகவும் மாணவன் கூறினார். இதை கேட்டு அதிர்ந்து போன பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக அருகே உள்ள விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு மாணவனை அழைத்துச் சென்றனர்.

    மாணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் மாணவன் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தான்.

    இதனால், மாணவன் கடத்தல் நாடக மாடுகிறாரா? அல்லது உண்மையில் காரில் வந்த கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மாணவன் கடத்தப்பட்டதாக பரவிய தகவல் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

    ×