search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stone on lorry"

    7-வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவுக்கு சென்ற லாரிகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். #lorrystrike
    நெல்லை:

    இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக லாரிகள் எதுவும் ஓடவில்லை. நெல்லை காய்கறி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. வெளியூர் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளன. கட்டிட பொருட்கள் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு சரக்கு ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு சென்றன. அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், அந்த லாரிகள் மீது கல்வீசி தாக்கி விட்டு டிரைவரை எச்சரித்து விட்டு ஓடிவிட்டனர். இதில் 2 லாரிகளின் கண்ணாடிகளும் உடைந்தன.

    இது தொடர்பாக லாரிகளின் டிரைவர்கள் தென்காசி வல்லத்தை சேர்ந்த மோகன், செல்வம் ஆகியோர் செங்கோட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய கும்பலை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் லாரிகள் ஸ்டிரைக்கை தீவிரபடுத்தவும், டேங்கர் லாரிகள் உள்பட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளையும் நிறுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். #lorrystrike
    ×