search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shortage of rabies medicine in Sulur Govt Hospital"

    • சூலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
    • வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    சூலூர்:

    சூலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஒரே மருத்துவமனையாக சூலூர் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.

    இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து சப்ளை இல்லை என கூறி மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு உண்டான வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

    தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாக புலம்புகின்றனர். இது பற்றி அங்கு மருத்துவ மனையில் உள்ள செவிலியரி டம் கேட்டபோது மருத்துவ மனைக்கு வரும் வெறிநாய் கடி மருந்து கொள்முதல் செய்யப் படும் தலைமை நிலையத் திலேயே பற்றாக் குறையாக உள்ளது. ஆகவே கடந்த சில நாட் களாக சூலூர் மருத்துவ மனைக்கு வெறி நாய்க்கடி மருந்து அனுப்பப் படுவதில்லை என தெரிவிக் கின்றனர். 

    ×