என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sempatty accident"
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள கதிரிபட்டியை சேர்ந்த ஏழுமலை மகன் ராமசாமி (வயது36). விவசாய கூலி தொழிலாளி. இவரும் இவரது நண்பரும் நேற்று இரவு மது குடிக்க ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இன்று அதிகாலை மணல் மேடு பகுதியில் ராமசாமியும் அவரது நண்பரும் ரத்த காயங்களுடன் சாலையோரம் கிடந்தனர். அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்திருந்தது.
இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரையும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது நண்பர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். குடிபோதையில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதால் விபத்து நடந்திருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்