search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankarankoil worker arrest"

    சங்கரன்கோவில் அருகே மது விற்றதை தட்டி கேட்ட போலீசாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    சங்கரன்கோவில்:

    கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கலிங்கப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 45). கடந்த சில வருடங்களுக்கு முன்பு கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அடித்து உடைக்கப்பட்டது. அதன் பின் அங்கு கடை திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் கோவிந்தன் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் கலிங்கப்பட்டியில் உள்ள கோவிந்தன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் இருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    கோவிந்தன் அந்த பாட்டில்களை தான் விற்பனை செய்யவில்லை என மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மதுபாட்டில்களை விற்பனை செய்ததாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தனை கைது செய்தனர்.
    ×