search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sandal wood smuggling"

    செம்மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அரூர் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் சித்தேரி மலை ஊராட்சியில் 62 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக பணம் வழங்குவதாக கூறி, புரோக்கர்கள் செம்மரம் வெட்ட ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர்.

    பணத்துக்கு ஆசைப்பட்டு செல்லும் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசாரிடம் சிக்கி கைதாகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

    கடந்த, 2015-ம் ஆண்டில் செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழகத்தை சேர்ந்த, 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில், சித்தேரியை சேர்ந்தவர்கள் 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் தற்போது செம்மரம் வெட்டுவதற்காக சென்ற சித்தேரி வாலிபர் மர்மமான முறையில் இறந்ததும், அவரது உடலை ஒரு கும்பல் வீசி விட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி மெதிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 38). இவருக்கு உண்ணாமுலை என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம், ராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (30), தீர்த்தமலை, சுப்பிரமணி உள்பட 5 பேர் செம்மரம் வெட்டி கடத்துவதற்காக ஆந்திர மாநிலம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராமன், மர்மமான முறையில் இறந்துள்ளார்.

    இதற்கிடையே ராமனுடன் சென்ற முருகன் உள்பட 4 பேரும், ஆந்திர வனத்துறையினரிடம் சிக்கி கைதாகி உள்ளனர்.

    இந்த நிலையில் இறந்த ராமன் உடலை எடுத்து வந்து சித்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் சொகுசு காரில் வந்த ஒருவர் வீசி விட்டு தப்பி சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் இன்று அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,

    இதுகுறித்த தகவலறிந்த அரூர் போலீசார் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரூர் அருகே உள்ள நாதியனூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சொகுசு காரில் ராமன், உடலை கொண்டு வந்து சாலையில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் எதற்காக ராமன் உடலை காரில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.இதுகுறித்து அரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ராமனை அழைத்து சென்ற 4 பேரும் ஆந்திர வனத்துறையினரின் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    செம்மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அரூர் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    தக்கலையில் சந்தன மரம் வெட்டி கடத்தியவர்களை கைது செய்த போலீசார், இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியில் சந்தனமரங்கள் வெட்டி கடத்திய சம்பவம் குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் தலைமையில் போலீசார் தக்கலை முத்தளக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசை கண்டதும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஒடினர்.

    சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஷ் (வயது31), ராஜா (52) எனவும் முத்தளக்குறிச்சி பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி திருடி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக ஏற்கனவே முத்தளக்குறிச்சி பூதகுளம் அருகில் உள்ள சுடுகாட்டில் சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டதாக ஊர் தலைவர் ரமேஷ் குமார் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கைதான இருவரையும் இன்று பத்மனாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மேட்டுப்பாளையத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேரை கைது செய்த வனத்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் - கோத்தகிரி ரோட்டில் உள்ள வனமரபியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் சந்தன மரத்தை யாரோ மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்று விட்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் செண்பகப் பிரியா உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் 2 குழுக்களாக பிரிந்து இரவு வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தன மரத்தை வெட்டி கடத்திய மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த மதிவாணன் (21), சின்ராஜ் (29) ஆகிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து சந்தன மரத்தை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் வனத்துறையினர் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×