search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem worker suicide"

    சேலம் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கயம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (28).இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிறது.

    இவர்கள் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூனம்பட்டியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர். கணவன்-மனைவிக்கிடைேய தகராறு இருந்து வந்தது.

    இதில் மனம் உடைந்த சதிஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதிஷ் குமார் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×