search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rugby football matches"

    மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரக்பி கால்பந்து போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை:

    மதுரையில் ரக்பி கால்பந்து போட்டிகள் தொடங்கியது. தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டிகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். தமிழக ரக்பி சம்மேளன தலைவர் ராஜ்சத்யன் வரவேற்றுப் பேசினார். அகில இந்திய செயலாளர் நசீர் உசேன் முன்னிலை வகித்தார்.

    இதைத்தொடர்ந்து வீரர்-வீராங்கனைகள் அறிமுகம் நிகழ்ச்சி நடந்தது. போட்டிகள் நாளை (ஞாயிறு) மாலை வரை நடக்கிறது.

    நாளை மாலை நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெறுவதால் போட்டி அதிக விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

    ×