search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajapalayam area"

    ராஜபாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது மது- புகையிலை விற்ற 8 பேரை கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி.ரவிச்சந்திரனின் ஆலோசனையின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மூவேந்திரன் (தெற்கு), முத்துகுமரன் (வடக்கு), திவ்யா (சேத்தூர்), குருவுத் தாய் (தளவாய்புரம்) மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.

    அப்போது சட்டவிரோதமாக மது விற்ற செல்வம், மாரியப்பன், மாரிமுத்து, சந்தோஷ், முத்துவைரம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் மற்றும் போலீசார் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக வீரபுத்திரன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் சேத்தூர் அருகே உள்ள சோலைசேரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற போஸ் (62) என்பவரை சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் கைது செய்தார்.

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாதசுவாமி கோவில் அருகே கஞ்சா விற்ற தெற்கு மலையடிபட்டியை சேர்ந்த அண்ணாமலை (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×