search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway employee died"

    • வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி பைக் தாறுமாறாக ஓடியது.
    • சாலையோர தடுப்பு கல்லின் மீது பயங்கரமாக மோதியதில் படுகாயமடைந்து ஊழியர் உயிரிழந்தார்

    வேடசந்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(54). இவர் ரெயில்வேதுறையில் பணியாற்றி வந்தார். தனது மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு வந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி பைக் தாறுமாறாக ஓடியது.

    சாலையோர தடுப்பு கல்லின் மீது பயங்கரமாக ேமாதியதில் தூக்கிவீசப்பட்ட சுரேஷ்குமார் படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ ஊழியர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×