என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ragi recipes
நீங்கள் தேடியது "Ragi Recipes"
தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகுடன் காய்கறிகளை சேர்த்து உப்புமா செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உருளைகிழங்கு - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
ப.மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய்.
செய்முறை :
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் வறுத்த கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
கேழ்வரகு மாவு - 1 கப்
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உருளைகிழங்கு - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
ப.மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம்பருப்பு, எண்ணெய்.
செய்முறை :
கேழ்வரகு மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், கொத்தமல்லி, உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன் அதில் வறுத்த கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சத்தான கேழ்வரகு வெஜிடபிள் உப்புமா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் கேழ்வரகை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கேழ்வரகு, காய்கறிகள் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 1 கப்,
தோசை மாவு - கால் கப்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - அரை கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
வெங்காயம் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
கேழ்வரகு மாவு - 1 கப்,
தோசை மாவு - கால் கப்,
உப்பு - தேவைக்கு,
தயிர் - அரை கப்,
துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ் கலந்தது - 1 கப்,
வெங்காயம் - 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சி, பச்சைமிளகாய் விழுது - 1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு - 4,
கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கேழ்வரகு மாவை வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் தோசை மாவு, தயிர், உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்த பின் இஞ்சி, பச்சைமிளகாய் விழுது போட்டு வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் கேரட் துருவல், பீன்ஸ் கலவையை சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, பொடித்த முந்திரிப்பருப்பை சேர்த்து கலந்து, ஊறவைத்த கேழ்வரகு மாவில் கொட்டி நன்றாக கலந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
சத்தான சுவையான கேழ்வரகு வெஜிடபிள் இட்லி ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - அரை கப்,
கேழ்வரகு மாவு - அரை கப்,
தண்ணீர் - தேவைக்கு,
கடுகு - கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
அரிசி மாவு - அரை கப்,
கேழ்வரகு மாவு - அரை கப்,
தண்ணீர் - தேவைக்கு,
கடுகு - கால் டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு, உருளைக்கிழங்கு சேர்த்து பரோட்டா செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பரோட்டா செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
ஸ்டஃப்பிங்க்கு...
உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்
செய்முறை :
கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை மாவு - அரை கப்
கேழ்வரகு மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
ஸ்டஃப்பிங்க்கு...
உருளைக்கிழங்கு - 1
கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
ஒமம் - கால் ஸ்பூன்
கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X