என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ragavendra Seva Foundation"
- நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா நடை பெற்றது.
- தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஸ்ரீராகவேந்திரா சேவா அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா லஷ்மி மகாலில் நடை பெற்றது. அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
அறக்கட்டளை செய லாளர் ஜோதி காமாட்சி வரவேற்று பேசினார். தலைவர் ஜெயக்கொடி, நிர்வாக குழு நடராஜன் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லட்சுமி ஆகியோர் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினர்.
நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சி, பரிசளிப்பு விழா நடை பெற்றது. தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துவோம் என ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவருக்கும் மரக்கன்றுகள், துணி பைகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தி னர்களாக நகராட்சி தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மாவட்ட அரசு மருத்துவ மனை குழந்தைகள் நலசிறப்பு மருத்துவர் தேவசேனா, மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மாவதி, லட்சுமி திருமண மகால் உரிமையாளர் ஜெகதீசன் லட்சுமி பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் பராசக்தி மேட்ச் ஒர்க்ஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எம். காய்கனி கடை உரிமையாளர் முத்துராஜன், அருண் பேக்கரி மாடசாமி, ஆஞ்சநேயர் விலாஸ் கடலை மிட்டாய் சக்திவேல், சுதர்சன் டிரேடிங் கம்பெனி தனபால், கே.என். சுப்புராஜ் நினைவு கல்வி கல்லூரி ராமச்சந்திரன், கொல்லம் சேகர், விக்னேஷ்வர் என்டர்பிரைசஸ் அசோக் மற்றும் நகராட்சி உறுப்பினர் லவராஜா, சண்முகவேல், பஜ்ரங் கணபதி ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், அரசு இயற்கை மருத்துவர் திருமுருகன், எம்.கே.எஸ். கேட்டரிங் கருப்பசாமி, வி.ஏ.ஓ. மந்திர சூடாமணி, வக்கீல்கள் முனீஸ்வரன், கார்த்திக், கார்த்திகேயன், நடராஜன், கதிரேசன், சுப்பிரமணியன், மாரிமுத்து, பாலமுருகன், தங்கராஜ், முருகன், செல்வம், சண்முக சுந்தரம், பாண்டியன், முத்து மாரியம்மன், காளிராஜ், மிலிட்டரி சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்