search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puthuiyamputhur"

    • பேச்சிமுத்துவிடம் குடிப்பழக்கத்தை நிறுத்தும்படி வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கில் தொங்கிய பேச்சிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    புதியம்புத்தூர் :

    புதியம்புத்தூர் ராஜம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 45). இவர் தனது மனைவி முருகம்மா ளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

    இவர் கட்டிட தொழிலாளி யாக வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவரு க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    குடிப்பழக்கத்தை நிறுத்தும்படி வீட்டில் உள்ள வர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேச்சிமுத்து அவருக்கு சொந்தமான மேலமடம் ஓடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தூக்கில் தொங்கிய பேச்சிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து பேச்சிமுத்து வின் உடல் பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×