search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PROSTITUTIO"

    • மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெற்றது
    • 2 அழகிகள் மீட்பு

    திருச்சி:

    திருச்சி தில்லை நகர் நான்காவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அப்பகுதிக்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த சங்கீதா (வயது32), சேலம் மாவட்டத்தை சேர்ந்த லைலா (23)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் ேசர்த்தனர். மேலும் அவர்கள் இருவருக்கும் இடைத்தரகராக செயல்பட்ட சரத் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அருள் செல்வம் என்ற இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் ரூ.1500, ஆணுறை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

    ×